பெரம்பலூர், ஜூலை 22- சிஐடியு பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட 7வது மாநாடு ஞாயிறன்று பெரம்பலூரில் சி.பிச்சைப்பிள்ளை, ஜி.வீரையன், வி.பி.சிந்தன் ஆகியோ ரது நினைவரங்கத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சிற்றம்பலம் கொடி யேற்றி மாநாட்டிற்கு தலைமை வகித் தார். துணை செயலாளர் எஸ்.அகஸ் டின் வரவேற்றார். சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.அழகர்சாமி, மாவட்ட பொருளாளர் பி.துரைசாமி, அங் கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் மணிமேகலை ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர்கள் ஜெய பால், கருப்பையா ஆகியோர் கோரிக் கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து மாவட்ட துணை தலைவர்கள் ஆர்.இராஜகுமாரன், எஸ்.என்.துரைராஜ், விவசாயிகள் சங்க மாட்ட செயலாளர் என்.செல்லதுரை, அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், மாதர் சங்க நிர்வாகி எ.கலையரசி ஆகியோர் பேசினர். மாவட்ட நிர்வாகிகள் பி. முத்துசாமி, பி.ரெங்கராஜ், எ.ரெங்க நாதன், சி.சண்முகம், கே.கண்ணன், ஆர்.மேனகா, எஸ்.சந்தானம், எஸ்.செல்வராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட துணை தலைவர் கணேசன் நன்றி கூறினார். மாநாட்டில், சமவேலைக்கு சம ஊதி யம் என்ற கோட்பாட்டின்படி குறைந்த பட்ச மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் அனைவருக்கும் வழங்க வேண்டும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஜெயங்கொண் டம் மின் திட்டத்தை உடனடியாக துவங்க வேண்டும். அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.