tamilnadu

img

ஜன.8 வேலைநிறுத்த ஆயத்தக் கருத்தரங்கம்

பெரம்பலூர், டிச.15- மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்தும் விவசாய விரோத போக்கினை கண் டித்தும் வரும் ஜனவரி 8 ஆம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத் தம் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்த கருத்தரங்கம் ஞாயிறன்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலை யம் அருகே உள்ள ரெட்டியார் அரங் கத்தில் நடைபெற்றது.  சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ். அகஸ்டின், தொழிற்சங்க மாவட்ட கவுன்சில் தலைவர் ஆர்.ரெங்கசாமி, மாவட்ட நிர்வாகிகள் ஏஐடியுசி என். தியாகராஜன், ஹெச்எம்எஸ் பி.நீல மேகம் ஆகியோர் தலைமை வகித்த னர். தொமுச நிர்வாகிகள் மேகநாதன், கட்டுமானம் கார்த்திகேயன், எம்.பிரபா கரன், கிருஷ்ணராஜ், சிஐடியு எ.ரெங்க நாதன், சி.சண்முகம், கே.மணி மேகலை, ஆர்.இராஜகுமாரன், ஏஐ டியுசி அ.ராஜேந்திரன், இரா.கோவிந்த ராஜ், ஜெ.நடராஜன், ஹெச்எம்எஸ் கே. மங்கையற்கரசி உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 27 அன்று பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. பின்னர் ஜனவரி 8 அன்று நடைபெறும் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் திரளாக பங்கேற்று வெற்றியடைய செய்ய வேண்டும் எனவும் கருத்தரங் கில் முடிவு செய்யப்பட்டது.