tamilnadu

img

பஞ்சாப், கர்நாடகத்திலும் ஊரடங்கு தளர்வு இல்லை...

பெங்களூரு 
இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மே 3-ஆம் தேதி வரை மத்திய அரசு 2-ஆம் கட்ட ஊரடங்கை கடைபிடித்து வருகிறது. எனினும் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் ஊரடங்கை தளர்த்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு கடந்த வாரம் வெளியிட்டிருந்தது. 

இந்த ஊரடங்கு தளர்வு தொடர்பான விவகாரத்தை ஏப்ரல் 19-ஆம் தேதி வரை பெரும்பாலான மாநிலங்கள் கண்டுகொள்ளவில்லை. நேற்று (ஏப்ரல் 20) தெலுங்கானா மாநில முதல்வர் ஊரடங்கு தளர்வு இல்லை எனவும், மே 7 வரை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீடிக்கும் என அறிவித்தார். தொடர்ந்து இன்று மதியம் தமிழக அரசு மே 3-ஆம் தேதி வரை தற்போது இருக்கும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீடிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதே கால இடைவெளியில் பஞ்சாப் மற்றும் கர்நாடக மாநிலங்கள் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் எனவும், மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தும் எண்ணம் இல்லை என அறிவித்துள்ளது. 

;