tamilnadu

img

இடதுசாரிகளுக்கு பெரும் வெற்றி கிடைக்கும்

திருவனந்தபுரம், மே 20-மக்களவை தேர்தல் முடிவுகளில் கேரளத்தில் இடதுசாரிகளுக்கு பெரும் வெற்றி கிடைக்கும். இது தொடர்பான தனது முந்தைய நிலைபாட்டில் உறுதி யாக உள்ளதாகவும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். வெளிநாடு பயணம் முடித்து கேரளாதிரும்பிய பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் பினராயி விஜயன் மேலும் கூறியதாவது:சபரிமலை பிரச்சனை தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சபரிமலையில் நடக்கக்கூடாத சம்பவங்கள் நடக்க யார் காரணம் என்பதுஅனைவருக்கும் தெரியும். அந்த போரா ட்டம் சில நபர்களை தாக்குவதற்காக மட்டுமே தவிர, சபரிமலையை பாது காப்பதற்காக நடத்தப்பட்டதல்ல என்று அதில் தலைமை வகித்த ஒருவரே தெரி வித்துள்ளார். ஆனால், சபரிமலையை பாதுகாக்க அரசு முயற்சிக்கிறது. சபரிமலையின் வளர்ச்சிக்காக தலைமைசெயலாளர் தலைமை வகிக்கும் உயர்அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த சீசனில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த உயர்தரமான அடிப்படை வசதிகள் செய்யப்படும்.மத்திய அரசு குறித்து அறிந்து கொள்ள 23ஆம் தேதி வரை காத்திருக்கலாம். 2004இல் எல்டிஎப் வெற்றி பெறும் என பெரும்பாலான ஊடகங்கள் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு களை வெளியிட்டன. ஆனால் வெற்றி பெற்று யுடிஎப் ஆட்சி அமைத்தது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலான நேரங்களில் தவறாகி விடுகின்றன. ஒரு கணிப்பு குறித்து மற்றொரு கணிப்பு மூலம் விவாதிக்க வேண்டியதில்லை. எப்படி யிருந்தாலும் தேர்தல் முடிவுகள் வரட்டும்.இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.