புதுச்சேரி, ஏப்.28- துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நடவ டிக்கையை கண்டித்து ஜூன் மாதத்தில் அமைச்சர் பத வியை ராஜினாமா செய்யப் போவதாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் அறிவித்திருக்கிறார். செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
கொரோனா தோற்று ஊரடங்கு உத்தரவால் புதுச்சேரி மக்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மக்களுக்கும் அரசின் சார்பில் இலவச அரிசி வழங்க வேண்டு மென்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவுசெய்து ஆளுநருக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் சிவப்பு நிற அட்டை தாரர்களுக்கு மட்டும் இலவச அரிசி தற்போது வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 10 ல் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்க முதல்வர் கையெழுத் திட்டு கோப்பு துணை நிலை ஆளுநருக்கு அனுப்பப்ப ட்டது. கிரண்பேடி வேண்டுமென காலம் தாழ்த்தினார்.
சிவப்பு அட்டைக்கு இன்னும் முழுமையாக இலவச அரிசி கொடுக்கவில்லை. அரிசியை பேக்கிங் செய்து போக்குவரத்து செலவுக்கு மட்டும் ரூ.7 கோடி வீண் செலவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் பணம் ஒரு ரூபாய் கூட வீணடிக்க மாட்டேன் என கூறிய துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அரசுக்கு நல்ல பெயர் கிடைக்க கூடாது என மக்கள் பணத்தை வீணடித்துவிட்டார். மேலும் சுகாதாரத்துறை பிரிவில் பணி செய்யும் ஊழியர்களின் ஊதியம் உயர்த்தி வழங்குவதற்கான கோப்பு அனுப்பப்பட்டு நீண்ட நாள் ஆகிறது. இது குறித்து எந்தவித பதிலும் சொல்லாமல் கிடப்பில் வைத்துள்ளார்.
கடந்த நான்கு வருடங்களாக தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் பிரதிநிதிகள், முதல்வர் ஆகியோரை செயல்பட விடாமல் தடுத்துவருவ தோடு, அதிகாரி களின் ஆட்சியாக நடத்தி வருகிறார். துணை நிலை ஆளுநரின் இந்த போக்கு தொடர்ந்தால் ஜூன் மாதத்தில் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன். இவ்வாறு மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.