பெங்களூரில் உள்ள ஒரு இரசாயன தொழிற்சாலையில் பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கித்தாவித்த 4 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளார்.
பெங்களூரில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் இன்று காலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் இருந்த மகாதேவ் பள்ளிக்கு அருகே தீயணைப்பு வாகனங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், 4 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளார். உயிர் சேதம் எதுவும் நிகழவில்லை. இருப்பினும் பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
பைத்ரயானபுரா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே, ஒரு வாரத்திற்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில், இரண்டாவது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
முன்பு ஏற்பட்ட தீ விபத்து, சமையல் எரிவாயு வெடித்தது. இதில், உணவகத்தில் 15 திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். வேய் விபத்து ஏற்பட்ட நேரத்தில் உணவகத்தில் 60 திற்கும் மேற்பட்டவர்கள் உணவருந்திக் கொண்டிருந்துள்ளனர். விபத்து காரணமாக உணவங்கத்தின் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோர் மீது அலட்சியமாக இருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.