tamilnadu

img

காங். தலைவர்களுக்கு அனுமதி கூடாது... ம.பி. அதிருப்தி எம்எல்ஏ-க்கள் டி.ஜி.பி.க்கு கடிதம்

பெங்களூரு:
மத்தியப் பிரதேச மாநில அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 22 பேர், பாஜக ஆட்சிநடக்கும் பெங்களூருவில் உள்ள ரமதாசொகுசு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள் ளனர். அவர்களை பாஜக சிறைப்பிடித்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டும் காங்கிரஸ், அந்த 22 பேரையும் சந்திப்பதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், கர்நாடக பாஜகஅரசின் காவல்துறை அதற்கு அனுமதி அளிக்கவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், வியாழனன்று ரமதாவுக்கு சென்ற நிலையில் அவரையும் சந்திக்க விடவில்லை. இதனால் அவர் ஹோட்டல் அருகிலேயே தர்ணாவில் ஈடுபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.“இதற்கிடையில், எங்கள் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. நாங்கள் தன்னிச்சையாகவே இங்கு தங்கி இருக்கிறோம். எங்களை எந்த காங்கிரஸ் தலைவர்களும் சந்திப்பதற்கு அனுமதி அளிக்கக் கூடாது” எனஅதிருப்தி எம்எல்ஏ-க்கள் 22 பேரும், கர்நாடகமாநில காவல்துறை டி.ஜி.பி.க்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

;