பெங்களூரு, செப். 9 - நோய் தாக்குதலுக்கு ஆளாகி உயிருக்கு போராடிவரும் 5 சிறார் களுக்கு பெங்களூருவில் ஒருநாள் போலீஸ் கமிஷனர் பதவி வழங்கப் பட்டது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயங்கிவரும் ‘மேக் எ விஷ்’ எனும் தொண்டு நிறுவனம், நிறைவேற முடியாத ஆசையுடன் வாழும் மக்களின் கனவுகளை முடிந்தவரை நிறைவேற்றி வைப்பதை தனது பணியாகக்கொண்டு இயங்கி வருகிறது. அவ்வகையில், கொடிய நோய் களுக்குள்ளாகி உயிருக்கு போராடி வரும் 4 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி ஆகிய 5 சிறார்களுக்கு பெங்களூரு நகரில் ஒருநாள் மட்டும் போலீஸ் கமி ஷனராக பதவியேற்க வைக்க அந்நிறு வனம் வைத்த கோரிக்கையடுத்து, போலீஸ் தலைமை அலுவலகத்தில், கமிஷனர் பாஸ்கர் ராவ், சீருடையுடன் அவர்கள் 5 பேரையும் ஒருநாள் கமிஷன ராக தனது நாற்காலியில் அமரவைத்து அழகுபார்த்தார். தங்களுக்கு வழங்கப்பட்ட மாதிரி கோப்புகளிலும் சிறார்கள் கையொப் பம் இட்டனர். மாதிரி ஆயுதங்கள் மற்றும் கைவிலங்குகளும் சிறார்களுக்கு வழங்கப்பட்டது. மருத்துவ சிகிச்சை பெறும் சிறார்களுக்கு மனதளவில் ஒருவித புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் இந்த ஏற்பாடுகள் நடை பெற்றதாக கூறப்படுகிறது.