சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆங்கில எழுத்தாளர்முல்க் ராஜ் ஆனந்த் ஆங்கிலத்தில் எழுதிய ஓர் இந்திய நாவல் ஆசிரியர் ஆவார். இவரின் படைப்புக்கள் அனைத்தும் பழங்கால இந்தியாவின் சமூக ரீதியாக பிந்தங்கிய மக்களின் வாழ்வியலை சித்தரிக்கும் விதமாக அமைந்திருக்கும். இந்திய -ஆங்கில இலக்கியத்தின் முன்னோடியாகத் திகழ்கிறார்.
மேலும் முல்க் ராஜ் ஆனந்த், ஆர். கே. நாராயணன், அகமது அலி, ராஜா ராவ் ஆகியோர் தான் முதன்முதலில் இந்தியாவை மையப்படுத்தி ஆங்கிலத்தில் எழுதினர். இதன் மூலம் எழுத்துலகில், உலக அளவில் இந்தியப் படைப்புகளுக்கான ஒரு இடத்தைப் பெற்றுத் தந்தது. ஆனந்தின் புதினம், சிறுகதைகள் ஆகியவை சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் உள்ள வறுமை, அவர்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் மற்றும் அவர்களின் இடர்பாடுகள் போன்றவற்றைப் பற்றியே அமைந்திருக்கும். மேலும் பஞ்சாபி மற்றும் இந்துஸ்தானி மொழி ஆகிய மொழிகளில் உள்ள மரபுத்தொடரை ஆங்கில இலக்கியங்களில் முதலில் பயன்படுத்தியவரும் இவர்தான். இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் பத்ம விபூசன் விருதினைப் பெற்றுள்ளார். முல்க் ராஜ் ஆனந்த் சிரின் வஜிஃப்தார் எனும் மரபார்ந்த நடனக் கலைஞரைத் திருமணம் புரிந்தார்.தனது தொன்னூற்று எட்டாம் அகவையில் நுரையீரல் அழற்சி நோயினால் புனேவில் செப்டம்பர் 28, 2004 இல் காலமானார்.
===பெரணமல்லூர் சேகரன்==