அரசாங்கக் கிடங்குகளில் உள்ள உணவு தானியங்களின் அளவு குறித்த விவரங்கள் அரசாங்கத்திடம் உள்ளதா, சேமிப்புத் திறனை விட அதிகமான அளவு இருந்தால், மாநிலங்களுக்கு இடையில் உணவு தானியங்களை விநியோகிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா, அளவு குறைவாக இருந்தால் அதனை அதிகரிக்க ஏதேனும் திட்டம் அரசிடம் உள்ளதா, என்பது குறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் 10.12.2019 அன்று மக்களவையில் கேள்வி எழுப்பினர்.
அவரது கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் தன்வே ராவ்சாகிப் டடராவ் அளித்த பதில்கள் பின்வருமாறு
ஆண்டின் ஒவ்வொரு காலாண்டின் முதல் நாளிலும் மத்திய குவிப்பில் உள்ள உணவு தானியங்கள் அளவு மற்றும் உணவு தானியங்களின் இருப்பு விதிமுறைகள் அளவு, கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
ஜனவரி 1, 2019 நிலவரப்படி: இருப்பு: 637.81 லட்சம் மெட்ரிக் டன்கள்(அரிசி அடிப்படையில் வரம்பற்ற நெல் உட்பட)
உணவு தானியங்கள் இருப்பு விதிமுறை அளவு: 214.10 லட்சம் மெட்ரிக் டன்கள்
ஏப்ரல் 1, 2019 நிலவரப்படி: இருப்பு: 568.08 லட்சம் மெட்ரிக் டன்கள் ( அரிசி அடிப்படையில் வரம்பற்ற நெல் உட்பட)
இருப்பு விதிமுறை அளவு: 210.40 லட்சம் மெட்ரிக் டன்கள்
ஜூலை 1, 2019 நிலவரப்படி: இருப்பு: 812.94 லட்சம் மெட்ரிக் டன்கள் ( அரிசி அடிப்படையில் வரம்பற்ற நெல் உட்பட)
இருப்பு விதிமுறை அளவு: 411.20 லட்சம் மெட்ரிக் டன்கள்
அக்டோபர் 1, 2019 நிலவரப்படி: இருப்பு: 669.49 லட்சம் மெட்ரிக் டன்கள் ( அரிசி அடிப்படையில் வரம்பற்ற நெல் உட்பட)
இருப்பு விதிமுறை அளவு: 307.70 லட்சம் மெட்ரிக் டன்கள்
அரசாங்கம் மத்திய குவிப்பிலிருக்கும் அதிகப்படியான உணவு தானிய அளவை அகற்றுவதற்காக, திறந்த உணவு சந்தை விற்பனை திட்டம் (OMSS) , மற்றும் அரசாங்கங்கள் இடையில் ஏற்றுமதி செய்தல் போன்ற வசதிகளை , (பொது கையிருப்பிலிருந்து ஏற்றுமதி செய்வதற்கு, உலக வாணிக நிறுவன விதிமுறைகள் படி புகார் ஏதும் இல்லை என்பதால்) உபயோகப்படுத்துகிறது
கோதுமை மற்றும் அரிசி இருப்பை, மொத்த வாடிக்கையாளர்கள்/வர்த்தகர்கள்/மாநில அரசுகள் போன்றோருக்கு, முன்னரே தீர்மானிக்கப்பட்ட விலையில், மத்திய குவிப்பிலிருந்து, அவ்வப்போது, இ-டெண்டர் மூலம், திறந்த வெளிச் சந்தையில், அளிப்பை அதிகரிக்க, அரசு, விற்கிறது.குறிப்பாக, நலிந்த பருவத்திலும், பற்றாக்குறையுள்ள பகுதிகளிலும், திறந்த வெளிச் சந்தை விலைகளை மிதப்படுத்த, இந்த முறையில் விற்பனை செய்கிறது.
2019-20 ஆம் ஆண்டில், திறந்த வெளிச்சந்தை விற்பனை (OMSS)யின்
கீழ், 100 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் 50 லட்சம் மெட்ரிக் டன் அரிசி விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் மற்றும் பிற நலத்திட்டங்களின் கீழ் தற்போதைய ஒதுக்கீட்டு அளவோடு, கூடுதல் வருடாந்திர உணவு தானிய தேவை அளவுகளை சுட்டிக்காட்டுமாறு அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
மாநில அரசுகளின் தேவைக்கேற்ப, திருவிழா, வறட்சி, இயற்கை பேரிடர் காலங்களில் கூடுதல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு,
அரசு, கூடுதல் உணவு தானியங்களை ஒதுக்கீடு செய்கிறது என்று கூறப்பட்டுள்ளது.