tamilnadu

தமிழகம் உள்பட 6 மாநிலங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு எச்சரிக்கை!

புதுதில்லி,மே 19- தமிழகம் உள்பட 6 மாநில ங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணைகளில் நீர்த் தேக்கம் மிக மோசமான நிலைக்குக் குறைந்து வரும் நிலையில் தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களுக்கு வறட்சி குறித்தஎச்சரிக்கையையும் ஆலோசனை களையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும்படி மாநிலங்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. வறட்சியைச் சமாளிப்பதற்கான ஆலோசனையை மே 17 அன்று தமிழகத்துக்கு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குஜராத், கர்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கும் வறட்சிக்கான எச்சரிக்கையும் ஆலோசனைகளும் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய நீர் ஆணையத்தின் உறுப்பினர் எஸ்.கே.ஹல்தார் கூறியுள்ளார்.கடந்த 10 ஆண்டுகளில் அணை களிலிருந்த சராசரி நீர் இருப்பை விட தற்போது 20 சதவீதம் குறைவாக உள்ளது. தண்ணீர் மாநிலப் பட்டிய லில் வருகிறது. ஆகையால், அணைகளில் மீண்டும் நீர் நிரம்பும் வரை ஆறு மாநிலங்களிலும் தண்ணீரை குடிப்பதற்கு மட்டும் பயன்படுத்தும்படி மத்திய நீர் ஆணை யம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள 91 முக்கிய அணைகளை மத்திய நீர் ஆணையம் கண்காணித்து வருகிறது.மே 16 அன்று மத்திய நீர் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, அணைகளில் ஒட்டுமொத்தமாக 35.99 பில்லியன் கியூபிக் மீட்டர் அளவுக்கு தண்ணீர் இருப்பதாகத் தெரியவருகிறது. 91 முக்கிய அணைகளின் ஒட்டுமொத்த கொள்திறன் 161.993 பில்லியன் கியூபிக் மீட்டராகும். குஜராத்தில் 10 அணைகளும், மகாராஷ்டிராவில் 17 அணைகளும், தமிழகத்தில் 6 அணைகளும், ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு அணையும், தெலுங்கானாவில் இரண்டு அணைகளும், கேரளத்தில் ஆறு அணைகளும், கர்நாடகத்தில் 14 அணைகளும் உள்ளன.தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக சென்னை மக்கள் ஷவர்களில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டுமென்றும் வெஸ்டர்ன் டாய்லெட்டுகளில் அதிக நீர் வீணடிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டுமென்றும் சென்னை குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. 

;