புதுதில்லி, மார்ச் 11 - தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போரா டிய மக்கள் மீது இந்துத்துவா வெறிக்கும்பல்கள் கட்டவிழ்த்து விட்டு 54 பேரின் உயிரைப் பறித்த கொடிய வன்முறை வெறியாட்டம் தொடர்பாக, எதிர்க்கட்சி உறுப்பி னர்களின் கடுமையான போராட்டத் தின் விளைவாக, மாநிலங்களவை யில் வியாழனன்று விவாதம் நடத்த மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் இரண்டாவது அமர்வில் ஹோலிப் பண்டிகைக்காக சில நாட்கள் விடுமுறைக்குப் பிறகு மார்ச் 11 புதனன்று இரண்டு அவைகளும் கூடியபோது, தில்லி வன்முறை, மத்திய பிரதேச அரசியல் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி, கொந்தளிப்பு ஏற்பட்டது.
மாநி லங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், தில்லி வன்முறை தொடர்பாக உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரண மாக, அவை மீண்டும் மீண்டும் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு, மதியம் பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி மார்ச் 12 வியாழ னன்று காலை அமர்வில் திவால் சட்டவிதிகள் திருத்த அவசரச் சட்டம் 2019 மற்றும் கனிமங்கள் சட்டத்திருத்த அவசரச்சட்டம் 2020 ஆகியவை தொடர்பான விவாதத்தையும், மாலை அமர்வில் தில்லி வன்முறை தொடர்பான விவாதத்தையும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதை அவையில் துணைத் தலைவர் அறிவித்தார்.
முன்னதாக அவையில் தில்லி வன்முறை தொடர்பாகவும், அதை ஒளிபரப்பிய ஏசியாநெட், மீடியா ஒன் டிவி ஆகிய ஊடகங்கள் மீது மத்திய அரசு தடைவிதித்ததை எதிர்த்தும் இடதுசாரிக் கட்சிகளின் உறுப்பினர்கள் ஆவேசத்துடன் குரல் எழுப்பினர். காங்கிரஸ், திரிணா முல் உள்ளிட்ட உறுப்பினர்களும் இவை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பினர். மக்களவையில் தில்லி வன்முறை, மத்தியப்பிரதேச பாஜகவின் குதிரை பேரம் உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பினர். குறிப்பாக, கடந்த வியாழனன்று அவையில் அரசுக்கு எதிராக குரல் கொடுத்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏழு காங்கிரஸ் உறுப்பினர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டுமென்று காங்கிரஸ், திமுக, இடதுசாரி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்