நாடு முழுவதும் பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் யுஜிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 1 முதல் 9 வகுப்பு மாணவர்கள் தேர்வுகளின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதேபோல, 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பல்கலை., செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இந்தக் கோரிக்கையை பரிசீலித்த அரசு, இறுதியாண்டு மாணவர்களை தவிர, பிற ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என யுஜிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் 31 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தொடர்பாக பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என யுஜிசிக்கு உத்தரவிட்டது.