tamilnadu

img

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று

புதுதில்லி, ஆக. 2-- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது  மத்திய உள்துறை அமைச்சர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகளு டன் இணைந்து மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்தபோது மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். தற்போது அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதாக கூறிய நிலையில், மருத்துவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக்கொண்டனர். அதன்படி அமித் ஷாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  ``எனக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால், பரிசோதனை செய்யப் பட்டது. முடிவு பாசிட்டிவ் என வந்துள்ளது. எனது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளேன். கடந்த சில நாட்களாக என்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு, பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்`` என அமித் ஷா டுவிட்டரில் கூறியுள்ளார்.

;