புதுதில்லி:
உஜ்வாலா இலவச எரிவாயு இணைப்புத் திட்டம் நிறுத்தம்; வெளிநாட்டுப் படிப்புச் செலவுகளுக்கான டிசிஎஸ் வரி விதிப்பு, தொலைக்காட்சி இறக்குமதிக்கான 5 சதவிகித கூடுதல் சுங்க வரி விதிப்பு ஆகியவற்றை அக்டோபர் 1 முதல் மோடி அரசு அமலுக்கு கொண்டுவந்துள்ளது.
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பை வழங்கும் திட்டம் 2020 ஏப்ரல் மாதத்துடன் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் கொரோனாவையொட்டி 2020 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது அக்டோபர்1 முதல் இலவச எரிவாயு இணைப்புத் திட்டம் இல்லை என்றாகி இருக்கிறது.
அதேபோல வருமான வரி விதிப்பிலும் அக்டோபர் 1 முதல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 206C (1G) இன் கீழ், டிசிஎஸ்-ஸின் வரம்பை விரிவுபடுத்தி, இதனை தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்திலும் (Liberalized Remittance Scheme - LRS)) நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, வெளிநாட்டுச் சுற்றுலா செலவு மற்றும் வெளிநாட்டில் படிப்பதற்கான செலவு ஆகியவற்றுக்கும் டிசிஎஸ் (Tax Collected at Source- TCS) எனப்படும் வரிப் பிடித்தம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கான வரிவிலக்கு உச்ச வரம்பு 7 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தொலைக்காட்சிப் பெட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய உபகரணங் களை (open cell) இறக்குமதி செய்வதற்கு5 சதவிகித சுங்க வரி விதிக்க ஓராண்டுக்கு முன்பு மத்திய அரசு முடிவு செய்தது. பின்னர் வரி விதிப்பிலிருந்து 2020 செப்டம்பர் 30 வரை விலக்கு அளித்திருந்தது. இதனால், அக்டோபர் 1 முதல் தொலைக்காட்சி உபகரணங்கள் இறக்குமதிக்கான சுங்க வரியும்நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, 32 இஞ்ச் டிவியின் விலையில் 600 ரூபாயும், 42 இஞ்ச் டிவியின் விலையில் 1,200 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று தொலைகாட்சி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.