புதுதில்லி, மே 24 - ஹரியானா மாநிலம் குரு கிராமைச் சேர்ந்த ஆட்டோ தொழி லாளி மோகன் பஸ்வான். ஊர டங்கு நேரத்தில் எந்த வருமான மும் இல்லாததால், தான் ஓட்டி வந்த வாடகை ஆட்டோவை அதன் உரிமையாளரிடம் கொடு த்துவிட்டு, 15 வயதே நிரம்பிய மகள் ஜோதி குமாரியுடன் பீகா ரில் உள்ள தனது சொந்த ஊருக் குச் செல்ல முடிவு செய்தார். எனினும், ஆட்டோ ஓட்டிய போது, காலில் அடிபட்டதால் எவ்வாறு செல்வது என்று தெரி யாமல் தவித்த அவரை, மகள் ஜோதி குமாரி, சைக்கிளில் உட் காரவைத்து, குருகிராம் முதல் பீகார் வரை 1200 கி.மீ. தூரத் திற்கு தானே ஓட்டிச் சென்றுள் ளார். இந்த சைக்கிள் பயணம் 7 நாட்கள் நீடித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர் களின் துயரத்திற்கும், மத்திய பாஜக அரசால் கைவிடப்பட்ட அவர்கள், எந்தளவிற்கு சிர மங்களைச் சந்தித்து, சொந்த ஊருக்குச் செல்கிறார்கள் என்ப தற்கும் வேதனையான சாட்சி யாக இந்த சம்பவம் அமைந்தது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மகள் இவன்கா டிரம்ப், தனது டுவிட்டரில் சிறுமி ஜோதி குமா ரியின் 1200 கி.மீ. சைக்கிள் பயணம் ஒரு ‘சாதனை’ என்றும்; இந்திய மக்களின் மனங்களை ஜோதி கவர்ந்து விட்டார் என்றும் பதி விட்டு பாராட்டியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “ஏழைத் தொழிலாளர்கள் தாங்கள் உயிர்வாழ்வதற்காக படும் அவஸ்தை மக்களின் மனங் களை கொள்ளையடிக்க செய் யும் சாதனை முயற்சி அல்ல!” என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேறு சிலரோ, ஏதோ ஒரு வகையில், இவான்கா தனது டுவீட் மூலம், இந்திய தொழிலா ளர்கள் படும் துயரை உலகறிய செய்து விட்டார் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.