புதுதில்லி:
பிரதமர் மோடியை, ‘இந்தியாவின் தந்தை’ என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியிருப்பதற்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.இந்நிலையில், டிரம்ப்பின் கருத்தை, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியும் கடுமையாக விமர்சித்துள்ளார்.“இன்றைய தினம், தேசத்தின் தந்தையை மாற்ற விரும்புபவர்கள் வரவேற்கப்படுகிறார்கள் போலும்.. அப்படியானால், அமெரிக்கத் தந்தைகளில் ஒருவரான ஜார்ஜ் வாஷிங்டனுக்கு பதிலாக டிரம்ப்பும் தன் னையே ‘அமெரிக்க தந்தை’யாக அறிவித்துக் கொள்ளலாமே?” என்று துஷார் காந்தி கூறியுள்ளார்.
மேலும், “வெறுப்பையும் வன் முறையையும் வணங்குபவர்கள் கோட்சேவைப் புகழ்ந்து பேசலாம்.அவர்கள் மீது எனக்கு எந்தவிதமான வெறுப்பும் இல்லை. காந்தியைவணங்க எனக்கு உரிமை இருப்பதுபோல் கோட்சேவை வணங்க அவர்களுக்கும் உரிமை உண்டு. நான் அவர்களை வரவேற்கிறேன்; யார்சிறந்தவர் என்பதை, காலம் தீர்மானிக்கும்” என்றும் டிரம்ப்பை, பாஜகவினரையும் விளாசியுள்ளார்.“மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளை, மத்திய அரசு பிரம் மாண்டமாக கொண்டாடுவது ஒரு அடையாள ஏற்பாடு மட்டுமே” என்றுகூறியுள்ள துஷார் காந்தி, “ஏற்கெனவே காந்தியை ரூபாய்த் தாள்களிலும், ‘தூய்மை இந்தியா’ திட்ட சின்னத்திலும் அவர்கள் சுருக்கி விட் டார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.