tamilnadu

img

டிரம்புக்குப் பதில் வேறு வேட்பாளர்?

அதிரடிக்குத் தயாராகிறது குடியரசுக்கட்சி

வாஷிங்டன், ஜூன் 8- கோவிட்-19, கருப்பின மக்கள் விவகா ரம், பொருளாதார சரிவு என்று அனைத்து விஷயங்களிலும் அமெரிக்கா பின்னடைவைச் சந்தித்திருப்பதால் டொனால்டு டிரம்பை மாற்றி விட்டு வேறொருவரை ஜனாதிபதித் தேர்த லில் நிறுத்தலாமா என்று குடியரசுக் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோ சித்து வருகிறார்கள். வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்கா வின் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடைபெற விருக்கிறது. ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் நிற்பது உறுதியாகியி ருக்கிறது. 

துணை ஜனாதிபதிக்கான வேட்பா ளரைத் தேர்வு செய்யும் முயற்சியில் ஜனநாயகக் கட்சி இறங்கியிருக்கிறது. குடியரசுக்கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு மற்றொரு வாய்ப்பு தரப்படும் என்று  எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலை யில் கோவிட்-19 மற்றும் கருப்பினத்தைச் சேர்ந்த பிளாயிட் கொல்லப்பட்ட விவகாரம் ஆகிய இரண்டும் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற் படுத்தியிருக்கிறது.  சர்வதேச அளவிலும் அவருக்கி ருந்த மதிப்பு பெரும் சரிவைச் சந்தித்தி ருக்கிறது. சீனா மீது பழிபோட்டு தப்பித்துக் கொள்ளும் அவரது முயற்சி யும் எடுபடவில்லை.

உலகிலேயே மிகப்பெரும் பணக்கார நாடு என்று கருதப்படும் அமெரிக்கா வில்தான் கோவிட்-19 தாக்கம் பெரு மளவில் உள்ளது. உயிரிழப்பிலும் முதலி டத்தில் இருக்கிறது. நோயைக் கட்டுப் படுத்துவதில் டிரம்ப் நிர்வாகம் காட்டிய அலட்சியம் பெரும் தோல்வி யையே தந்துள்ளது. புதிய தொற்று இன்னும் குறைந்தபாடில்லை. சராசரி யாக பத்தாயிரம் என்ற அளவில் அதிக ரிக்கிறது. மொத்தம் 20 லட்சத்தைத் தாண்டிவிட்டது.

கருப்பினத்தைச் சேர்ந்த பிளாயிட் படுகொலைக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஜூன் 6 ஆம் தேதியன்று லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களின் வீதிகளிலும் திரண்டு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில்தான், அமெரிக்கா வின் முன்னாள் ஜனாதிபதி புஷ், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாவல் மற்றும் பல தற்போ தைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகி யோர் டிரம்பைக் கை கழுவிவிடலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.  அவருக்குப் பதிலாக வேறு ஒருவ ரைக் குடியரசுக்கட்சி சார்பில் நிறுத்தி னால் மக்கள் நம்பிக்கையை மட்டு மல்ல, குடியரசுக்கட்சிக்குள் ஒற்று மையை வலியுறுத்தும் பகுதியினரின் நம்பிக்கையும் வெல்ல முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.