tamilnadu

img

சீத்தாராம் யெச்சூரி லண்டன் பயணம்

புதுதில்லி, அக். 29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி லண்டன் செல்கிறார். அங்கே கிரேட் பிரிட்டன் ஆக்ஸ்போர்டு யூனியன், காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக ஏற்பாடு செய்துள்ள விவாதத்தில் பங்கேற்கிறார். காஷ்மீர் மீதான அரசின் தீர்மானத்திற்கு எதிராக சீத்தாராம் யெச்சூரி பேசுகிறார். அரசின் தீர்மானத்தை ஆதரித்து பாஜகவின் சார்பில் பைஜ்யாவந்த் ஜே பாண்டா பேசுகிறார்.

காஷ்மீர் மாநிலம் சிதைக்கப்பட்டபின்னர் அம்மாநிலத்திற்கு சென்ற முதல் இந்திய அரசியல்வாதி சீத்தாராம் யெச்சூரி மட்டுமே ஆவார். முதலில் 3 தடவை அவர் அங்கே சென்றார். முதலில் தனியே நலிவுற்றிருக்கிற தோழர் முகமது யூசுப் தாரிகாமியைப் பார்க்கச் சென்றார். பின்னர் சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜாவுடன் சென்றார். மூன்றாவது தடவை எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களுடன் சென்றார். இம்மூன்று முறையும் அவரை ஆட்சியாளர்கள் அனுமதித்திடவில்லை. பின்னர் உச்சநீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க அம்மாநிலத்திற்குச் சென்று முகமது யூசுப் தாரிகாமியைப் பார்த்துவிட்டு வந்தார். இந்திய காஷ்மீர் பிரச்சனைகள் தொடர்பாக ஆக்ஸ்போர்டு யூனியன் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் அதனைத் தொடர்ந்து இந்தியன் ஒர்க்கர்ஸ் யூனியன் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். (ந.நி.)