tamilnadu

img

சீன ஜனாதிபதியை வரவேற்க பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்

சென்னை, அக். 9- பிரதமர் நரேந்திர மோடி - சீன ஜனா திபதி ஜி ஜின்பிங் சந்திப்பு அதி காரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கி றது. இதுகுறித்து இந்திய வெளி யுறவுத்துறை வெளியிட்டுள்ள அறி விப்பில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வருகிற 11ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். அன்றைய தின மும் மறுநாள் அக்டோபர் 12ஆம் தேதி யும், இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. இரண்டாவது முறையாக நடைபெறும் இந்த  சந்திப்பின் போது இருநாடுக ளுக்கிடையிலான உறவுகள், பரஸ்பர  உடன்பாடுகள், பிராந்திய மற்றும்  பன்னாட்டு அளவிலான விவகாரங்கள்  குறித்து, விவாதிக்கப்பட வாய்ப்பு  ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டி ருக்கிறது. கடந்தாண்டு ஏப்ரல் மாதம் சீனா வின் ஊகான் நகரில் இந்திய பிரதமர்  மோடி - சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இடையே சந்திப்பு நடைபெற்றது. அத னைத் தொடர்ந்து மோடியின் அழைப்பின் பேரில், சீன அதிபர்  தமிழ்நாட்டிற்கு வருகை புரிவதாக வும், வெளியுறவுத்துறை கூறியிருக்கி றது. இந்த சந்திப்பினை, இந்தியா வுக்கான சீன தூதர் சன் வெய்டாங்கும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

கடலில் போர்க் கப்பல்கள்...

இரு நாட்டின் தலைவர்கள் சந்திப்பை ஒட்டி, பாதுகாப்புக்காக மாமல்லபுரம் கடலில் சீனா-இந்தியா  நாட்டு கடற்படைகளின் 4 போர்க் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 4 நாட்டிகல் மைல் தொலைவுக்கு ஒரு  போர்க் கப்பல் என 10 நாட்டி கல் மைல்  தொலைவு சுற்றளவைக் கண்கா ணிக்கும் வகையில் இருநாடுகளும் தலா 2 போர்க் கப்பல்களை, மாமல்ல புரம் கடலில் நிறுத்தி வைத்துள்ளன. அதிவிரைவுப் படகுகளும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பிரம்மாண்ட வரவேற்பு
 

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அரசு  முறை பயணமாக சென்னை வரு கிறார். பிரதமர் மோடியும் சென்னை  வருகிறார். எனவே, சென்னை விமான  நிலையத்தில் சீன அதிபருக்கு சிறப் பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படு கின்றன. இதன் பின்னர் கிண்டியில் உள்ள சோழா கிராண்ட் நட்சத்திர ஓட்ட லில் தங்குகிறார். பிரதமர் மோடி கோவளத்திலுள்ள தாஜ் ஓட்டலில் தங்க உள்ளார்.

சீன ஜனாதிபதி ஒருவர் சென்  னைக்கு வருவது இதுவே முதல் முறை யாகும். இதனால், இதுவரை இல்லாத வகையில் சிறப்பான, பிரம்மாண்ட வர வேற்பு அளிக்கப்படுகிறது. சென்னை  விமான நிலையத்தில் சீன அதிபர் வந்து  இறங்கியதும் சுமார் 7 ஆயிரம் பேர்  திரண்டு அவரை வரவேற்கும் வகை யில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  விமான நிலையத்தில் இருந்து கிண்டி நட்சத்திர ஓட்டலுக்கு செல்லும்  வழியிலும் கிண்டியில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையிலும் சுமார் 50 கி.மீ. தூரத்துக்கு 35 இடங்க ளில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்காக சாலையோரங்களில் வாழை மரம் மற்றும் தோரணங்க ளும் கட்டப்படுகின்றன. விமான நிலைய வளாகத்துக்குள் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

கலை நிகழ்ச்சிகள்

விமான நிலையத்திலிருந்து ஓட்டல் வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு  வழி நெடுக 6 ஆயிரத்து 800 கல்லூரி  மாணவர்கள், சுய உதவிக் குழுவினர்  தேசியக் கொடியை ஏந்தி வரவேற்பு அளிக்கிறார்கள்.  கேரள செண்டை மேளம், கோவை டிரம்ஸ், வட இந்தி யாவில் புகழ்பெற்ற நாசிக் டோல்  இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படு கின்றன. ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டல் முன்பு வாழை மற்றும் கரும்பு களால் ஆன அலங்கார வளைவுகள் அமைக்கப்படுகிறது. ஓட்டல் வாசலில்  தமிழர்களின் பாரம்பரிய இசையான நாதஸ்வர இசையுடன் சீன அதிபரை  வரவேற்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே கரகாட்டம், டிரம்ஸ் வாத்தியம்,  காந்தி மண்டபம் அருகே தப்பாட்டம், ஒயிலாட்டம், மத்திய கைலாஷ் அருகே மதுரை கரகாட்டக் குழுவின ரின் ஆடல் நிகழ்ச்சி, திருவான்மியூர் சிக்னல் அருகே செண்டை மேளம் ஆகி யவை இசைக்கப்படுகிறது.

கந்தன்சாவடியில் பேண்டு வாத்தி யக்குழுவினரின் நிகழ்ச்சி, புலி ஆட்டம், சிலம்பாட்டம் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதே போல் வழி நெடுக வரவேற்பு வளைவுகள், பேனர்  கள் வைத்து சீன ஜனாதிபதியை வரவேற்க  ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாமல்லபுரம் நுழைவு வாயிலில்  பனை ஓலையால் அலங்கரிக்கப்பட்ட வளைவுகள் அமைக்கப்படுகின்றன. அர்ஜூணன் தபசு பகுதியில் மலர்க ளால் அலங்கரிக்கப்பட்ட வளைவும், ஐந்துரத சாலையில் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட வளைவுகளும், கடற்கரை கோவில் நுழைவு வாயி லில் மலர்களால் அலங்கார வளைவு களும் அமைக்கப்படுகிறது. சீன ஜனாதிபதி தமிழகத்தின் பெரு மைகளையும், கலாச்சாரத்தையும் அறிந்து கொள்ளும் வகையிலேயே இதுபோன்ற கலைநிகழ்ச்சிகளும், வர வேற்புகளும் தமிழக அரசு சார்பில் கொடுக்கப்படுகிறது.