tamilnadu

img

இந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நிறைவு

புதுதில்லி:
 எல்லையில் எழுந்துள்ள பிரச்சனைகள் குறித்து  இந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை நிறைவுபெற்றது.

இந்தியா-சீனா இடையிலான  எல்லை குறித்த முரண்பாடுகளுக்கு தீர்வு காண கடந்த 2 ஆம் தேதியன்று மேஜர் ஜெனரல்அந்தஸ்துள்ள அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் எந்தமுடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, லெப்டினன்ட் ஜெனரல் நிலையிலான அதிகாரிகளிடையிலான உயர்மட்டபேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டது.அதன்படி எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் சீன பகுதியான மோல்டோ என்ற இடத்தில் ஞாயிறன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. பதற்றத்தை தணிப்பதற்காக சில திட்டங்கள் முன்வைக்கப்பட்டு, அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து பேசப்பட்டது.இந்தியா தரப்பில் 14- வது படைப்பிரிவு  கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர்சிங், சீனா தரப்பில் தெற்கு ஜின்சியாங் ராணுவ பிரிவு கமாண்டர் லின் லியூ ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.பேச்சுவார்த்தையின் முடிவில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன ராணுவத்தினர்  திரும்பிச்செல்வார்கள் என்று  தகவல் வெளியாகியுள்ளது.

;