tamilnadu

இந்திய-சீன எல்லையில் மோதல் இல்லை ஊடகங்களுக்கு இந்திய ராணுவம் கண்டனம்

புதுதில்லி:
கிழக்கு லடாக்கில் இந்திய- சீன எல்லையில் எந்தவிதமான மோதலும் இல்லை. அவ்வாறாக வெளியிடப்படும் செய்திகளில் உண்மை இல்லை என இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.எல்லையில் மோதல் நடப்பதாக ஊடகங்களில் வெளியான வீடியோ காட்சிகள் அதிகாரப்பூர்வமானவை அல்ல எனவும், எல்லையில் பிரச்சனைகள் உள்ளதாக சித்தரிக்க நடக்கும் முயற்சிகள் சரியல்ல. இப்போது பிரச்சனைகள் ஒன்றும் இல்லை. எல்லை பிரச்சனைகள் ராணுவ தலைவர்களுக்கு இடையிலான கருத்துப் பரிமாற்றத்தின் மூலம் தீர்வு காணப்படும். தேசத்தின் பாதுகாப்பை பாதிக்கும் பிரச்சனைகளை இவ்வாறு கையாளும் ஊடகங்களுக்கு வன்மையான கண்டனம் தெரிவிப்பதாகவும்,  எல்லையில் தற்போதைய நிலைமையை மோசமாக சித்தரிக்கும் காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்றும் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

;