தமிழக சட்டப்பேரவை வரும் 14 ம் தேதி கலைவாணர் அரங்கில் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை விதியின் படி ஆண்டிற்கு 2 முறை 6 மாத இடைவெளியில் சட்டப்பேரவை கூட்டம் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும். பிப்ரவரி மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் மற்றும் மே ஜூன் ஆகிய மாதங்களில் மானியக் கோரிக்கை விவாதம் நடத்தப்படும். இதைத்தொடர்ந்து 6 மாதத்திற்கு பிறகு ஆளுநர் உரை நிகழ்த்துவார். ஆனால் கடந்த மார்ச்24ம் தேதியுடன் கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா அச்சம் காரணமாக சட்டப்பேரவை கூட்டம் அவசரமாக முடிக்கப்பட்டது.
இதனால் வரும் 24ம் தேதிக்குள் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடத்த வேண்டி உள்ளது. தற்போதைய சூழலில் தனிமனித இடைவெளியை கடைபிடித்து புனித ஜார்ஜ்கோட்டையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் கூட்டம் நடத்தும் அளவிற்கு இடம் இல்லை. இதையடுத்து தற்போது கலைவாணர் அரங்கில் கூட்டத்தொரை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது .வரும் 14ம் தேதி காலை 10 மணியளவில் கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவை கூடும் என்று செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.