மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் வேதனை
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் ஆறுதல்
‘அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்’
புதுதில்லி. மார்ச் 3– தில்லி கலவரத்தில் காவல்துறையின் ஆதரவு டன் முஸ்லீம்களின் உயிர்களும், உடைமை களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. காவல்துறை யினரின் தோல்விக்கு காரணமான உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக ராஜினாமா செய்யும் நடவடிக்கை மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலை அளிக்கும் என தில்லி வன்முறை- வெறியாட்டத்தில் எரிந்து சாம்பலான பகுதிகளை பார்வையிட்டும், பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு ஆதரவினைத் தெரிவித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை தலைவர் பி.ஆர்.நடராஜன், ஆழப்புழா நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.ஆரிப் ஆகியோர் வலி யுறுத்தியுள்ளனர். பி.ஆர்.நடராஜனும், ஏ.எம்.ஆரிப்பும் செவ்வா யன்று வடகிழக்கு தில்லியில் வன்முறை நடந்த பகுதிகளை ஆய்வு செய்தனர்.
இதனைத்தொடர்ந்து அவர்கள் வெளி யிட்டுள்ள காணொலியில் கூறியிருப்பதாவது: வன்முறை வெறியாட்டம் நடைபெற்ற வட கிழக்கு தில்லியின் பலபகுதிகள் எரிந்து சாம்ப லாகிக்கிடக்கின்றன. காவல்துறையினர் அனைத்து இடங்களுக்கும் சென்று பார்வையிட எங்களுக்கு அனுமதிக்கவில்லை. ஏனென்றால் எரிந்து சாம்பலான அப்பகுதியின் கோரம் வெளி உலகிற்கு தெரிந்துவிடக்கூடாது என அவர்கள் எச்சரிக்கையாய், அதனை மறைக்க முயல்கின்ற னர். இப்பகுதியிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் தான் உத்தரப்பிரதேசம் மாநிலம் உள் ளது. இப்பகுதியில் இந்துக்களும், முஸ்லிம் களும் ஒற்றுமையாக அன்புடனும், சகோதரத்து வத்துடனுமே வாழ்ந்து வருகின்றனர். இவர் களுக்குள் எப்போதும் எந்த பகையும் இருந்ததே இல்லை என்பதை இவர்களிடம் பேசியதிலிருந்து அறிய முடிந்தது.
பின்னர் எப்படி இந்த தாக்குதல் நடைபெற்றது என்றால், உத்தரபிரதேசத்தில் இருந்து வந்த ஆர்எஸ்எஸ். பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த வர்கள் இப்பகுதிக்கு வந்து கலவரத்தை ஏற்படுத்தி யுள்ளனர். இங்கு 16க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பள்ளிவாசல்களை தகர்த்து எரித்துள்ளனர். எந்தவொரு இந்து கோவில்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. திட்டமிட்டு இங்கு ஒரு கலவரத்தை உரு வாக்கி மதப்பிரிவினை உருவாக்க வேண்டும் என்றே இக்கலவரத்தை செய்துள்ளனர் என்பது கண்கூடாக தெரிகிறது. ஏற்கனவே 1969களிலும், குஜராத்தில் 2002களிலும் செய்ததுபோல இங்கும் அத்தகைய கலவரத்தை நடத்த முயன்றுள்ளனர். ஏராளமான முஸ்லிம்களின் வீடுகளையும், கடை களையும், நிறுவனங்களையும் குறிவைத்து தகர்த்தும், எரித்தும் தங்களின் வெறித்தனத்தை காட்டியுள்ளன
தற்போது பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு சீக்கிய சகோதரர்கள் உடன் நின்று உணவு, உடை உள்ளிட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இதேபோன்று மார்க்சிஸ்ட் கட்சியும் வலுவான நிவராணக் குழுக்கள் அமைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுவீடாக சென்று நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இங்கு தற்போதும் மிகவும் மோசமான சூழல் நிலவி வருகிறது. நாங்கள் ஏற்கனவே நாடாளு மன்றத்தில் கூறியதுபோல இந்த வன்முறை வெறி யாட்டம் குறித்து நீதித்துறை விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி யாக தேவையான நஷ்ட ஈடு தரவேண்டும். கல வரத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் முழு பொறுப்பு காவல்துறையினரின் தோல்வியே ஆகும். காவல்துறையின் ஆதரவுடன் குறி வைத்து முஸ்லீம்களின் உயிர்களும், உடைமை களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இத்துறைக்கு பொறுப்பான மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினமா செய்ய வேண்டும் அல்லது அவரை அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கை நியா யமானது. இதை இப்பகுதிக்கு வந்து பார்த்த வர்களால் புரிந்து கொள்ள முடியும். அதுவே பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிப்பதாக இருக்கும் என உணர்கிறோம். நாங்கள் இங்கு பார்வையிட வந்தபோது இந்து, முஸ்லீம், சீக்கியர் என எல்லா மதத்தி னரும் எங்களை அன்புடன் வரவேற்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று எங்களிடம் நடந்தவைகள் குறித்து விளக்கினர். அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆதரவை தெரிவித்தோம். உங்களோடு நிற்போம் என்கிற உறுதியையும் அளித்தோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.