கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் முறையில் மாற்றம் பேரழிவை ஏற்படுத்தும்
மருத்துவர் சங்கம் கேள்வி
புதுதில்லி, மே 9- கடுமையான கொரோனா தொற் றால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்வதற்கு முன் பரிசோதிக் கப்பட வேண்டும் என சுகாதார அமைச்ச கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்ட நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்வ தற்கு முன் பின்பற்ற வேண்டிய வழி காட்டு நெறிமுறைகளை மத்திய சுகா தார அமைச்சகம் திருத்தியுள்ளது, கடு மையான நோயால் பாதிக்கப்பட்ட நோயா ளிகளை மட்டுமே பரிசோதிக்க வேண்டு மெனக் கூறியுள்ளது மிக மென்மையான, லேசான, அறி குறி உள்ளவர்கள், உள்ளிட்ட பிற வகை நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்வ தற்கு முன் பரிசோதிக்க வேண்டிய தில்லை.
“அதாவது நோய்அறிகுறி தோன்றி பத்து நாட்களில் சம்பந்தப்பட்டவருக்கு மூன்று நாட்கள் காய்ச்சல் இல்லை யெனில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் கள். இவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படும் முன் கொரோனா லேப் டெஸ்ட் தேவை யில்லை” என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மிதமான கொரோனா நோயாளி களுக்கு உடல் உஷ்ணம், பிராணவாயு நிலை சோதிக்கப்படும். இவர்களுக்கு மூன்று நாட்கள் காய்ச்சல் வராமல் இருந்தாலோ இவர்கள் வெளியிலி ருந்து கொடுக்கப்படும் பிராணவாயு ஆதரவில்லாமல் நான்கு நாட்களுக்கு இருந்தாலோ அறிகுறி தெரியவந்த பத்து நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படு வார்கள்.
டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் சளி, இருமல், மூச்சுத்திணறல் இருந் தால் கொரோனா சிகிச்சை மருத்துவ மனையையோ, மாநில உதவி மையத் தையோ அல்லது 1075 என்ற உதவி எண்ணையோ தொடர்பு கொள்ளலாம். இதற்குப் பிறகு 14 நாட்கள் சென்று டெலிகான்பரன்ஸ் மூலம் இவர்கள் உடல் நலம் விசாரிக்கப்படும். திருத்தப்பட்ட வழிகாட்டுதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் உள் ளுறை மருத்துவர்கள் சங்கப் பொதுச் செயலாளர் சீனிவாஸ் ராஜ்குமார், “கொரோனா நோயாளிகளை சோதனை செய்யாமல் அனுப்பும் முடிவு பேர ழிவு” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்யாமல் திருப்பி அனுப்புவதால் சமூ கத்தில் வைரஸ் பரவக்கூடும். போது மான சோதனை வசதிகளை ஏற்பாடு செய்யாமல் 40 நாட்களாக அரசு என்ன செய்து கொண்டிருந்தது? தற்போதைய புதிய மதிப்பீடுகளின் அடிப்படையில் இரண்டு லட்சம் இந்தியர்களை தியாகம் செய்ய அரசு தயாரா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.