தபாங் 3 திரைப்பட நடிகை சோனாக்ஷி சின்ஹா படத்தின் வருவாயை விட குடியுரிமைதிருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டமே முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான், சோனாக்ஷி சின்ஹா சுதிப் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 20ம் தேதி வெளியான படம் தபாங் - 3. இப்படத்தின் முதல்நாள் வசூல் 24.5 கோடி.
இந்நிலையில் ஏஞ்சல் எக்ஸ்பிரஸ் அறக்கட்டளையின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சோனாக்ஷி சின்ஹா செய்தியாளர்களிடம் பேசியதாவது நாட்டில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். எது முக்கியம் என்று மக்களுக்கு தெரியும் என நான் நினைக்கிறேன். ஆனாலும் எங்கள் படத்திற்கு ரசிகர்கள் அளித்த ஆதரவை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முழு நாடும் ஒன்றாக சேர்ந்துள்ளது. இது ஒரு திரைப்படத்தை விட முக்கியமானது என்று தெரிவித்தார். தங்கள் கருத்துகள் குறித்து குரல் கொடுக்கும் மக்களை பார்த்து நான் பெருமைப்படுகிறேன் நான் அவர்களுடன் இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.