tamilnadu

img

நாடே இருளில் மூழ்கும் ஆபத்து

ஒரே நேரத்தில் விளக்குகளை அணைத்து மீண்டும்  எரியச் செய்தால் தேசிய மின்தொகுப்பு நிலைகுலையும்

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை

புதுதில்லி, ஏப்.4- கோவிட் 19 தொற்று நோயை எதிர்த்து போராடுகிறோம் என்ற பெயரில் இன்றையதினம் (ஞாயிறு) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் நாடு முழுவதும் மின் விளக்குகளை அணைத்து வையுங்கள் என்ற பிரதமர் நரேந்திரமோடியின் அழைப்பு, நாட்டின் மின்சார கட்டமைப்பை கடுமையாக பாதிக்கக் கூடிய ஒரு பெரும் ஆபத்தை கொண்டு வந்துவிடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக் குழு சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஞாயிறன்று (இன்று) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் நாடு முழு வதும் மின் விளக்குகளை அணைக்க வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இது நாட்டின் மின்சார கட்டமைப்புக்கு - தேசிய மின் தொகுப்புக்கு (தேசிய பவர் கிரிட்) - ஒரு அச்சு றுத்தலாக மாறியுள்ளது. அதாவது, ஒரே நேரத்தில் நாடு முழு வதும் விளக்குகளை அணைப்பது மற்றும் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் எரிய செய்வதால் தேசிய மின் தொகுப்பில் சுமார் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரையிலான மின்சாரத்தை ஒரே நேரத்தில் நிறுத்தி, ஒரே நேரத்தில் பயன்படுத்த நேரிட்டு விடாதா?

இதன்விளைவாக மின்தொகுப்பு ஸ்தம்பித்து நிலை குலையும் சூழல் ஏற்பட்டுவிடும். இதன் தொடர் விளைவு, 2012 ஜூலை மாதத்தில் இந்தியா முழுவதும் ஏற்பட்டது போன்று நாடே இருளில் மூழ்கும் ஆபத்தை கொண்டு வந்துவிடும். இந்நிலை ஏற்பட்டால் மீண்டும் மின்தொகுப்பு செயல்பாடு களை இயல்பு நிலைக்கு கொண்டு வரவே 2 - 3 நாட்கள் ஆகிவிடும். 

எண்ணிப் பாருங்கள், கோவிட் 19-ஐ எதிர்த்து, பாதிக்கப் பட்டுள்ள நோயாளிகளை பாதுகாத்திட நமது மருத்துவ மனைகளும், மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும் மிக முக்கியமான போராட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கிற வேளையில் இப்படி நடந்தால், அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று! 

எண்ணிப் பாருங்கள், வீடுகளில் அடைந்து கிடக்கும் நாம் எல்லோரும் ஒட்டுமொத்தமாக இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டால் என்னவாகும் என்பதை!

தேசிய மற்றும் மாநில மின்தொகுப்புகளின் அதிகாரிகள் ஏற்கனவே இதுதொடர்பாக எப்படிப்பட்ட அபாயங்கள் ஏற்படும் என்பதை மத்திய, மாநில அரசுகளுக்கு சுட்டிக்காட்டி எச்சரித்திருக்கிறார்கள். எனவே, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் விளக்குகளை அணைக்க வேண்டும் என்ற அழைப்பினை பிரதமர் உடனடியாக வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மாறாக, மின் தொகுப்பு நிலைகுலையுமானால், மின்சாரம் இல்லாமல், நாடு மிகக் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். திரும்பவும் மின்சாரம் கிடைக்கும் வரை கொரோனா கொள்ளை நோயை எதிர்த்து போரிடும் திறன் நமக்கு இல்லை. ஏற்கெனவே நாடு கோவிட் 19 கொள்ளை நோயாலும், அது தொடர்பான ஊரடங்கு காரணமாகவும் கடுமையான சிரமங்களை சந்தித்து கொண்டிருக்கிறது. இத்தகைய நிலையில், நாடு மற்றுமொரு பெரும் ஆபத்தை கட்டாயம் சந்திக்கக் கூடாது. இவ்வாறு அரசியல் தலைமைக் குழு தெரிவித்துள்ளது.

தனித்திருந்தே  உரிமைக்கு குரல் எழுப்புவோம்!

இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமரின் இன்றைய உரை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சு வதாக உள்ளது. பிரதமர் ஏற்கனவே கையை தட்டச் சொன்னார், இப்போது விளக்கை அணைக்க சொல்கிறார், நாளை என்ன சொல்வாரோ? அவருக்கே வெளிச்சம்! 

கோடானு கோடி இந்திய மக்கள் தங்களது வாழ்வா தாரத்தை இழந்து தங்களது எதிர்காலம் தொலைந்துவிட்ட அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இந்த இக்கட்டான நேரத்தில் மக்களைக் காப்பாற்றும் பெரும் பொறுப்பு மத்திய மாநில அரசு களிடம் உள்ளது. மாநில அரசுகளோ மத்திய அரசின் நிதி உள்ளிட்ட உதவிகளை எதிர்பார்த்து நிற்கும் கையறு நிலை யில் உள்ளன. 

அசாதாரணமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு பிரதமரின் உரை ஏமாற்றம் அளிப்பது மட்டுமல்ல நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறது. 

ஒருபுறம் கொரோனா வைரசின் அச்சுறுத்தல், மறுபுறம் அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள். இவ்விரு கொடுமைகளிலிருந்தும் மக்களை காப்பாற்ற தம்மிடம் எது வுமில்லை என்பதை பிரதமர் சொல்லாமல் சொல்லிவிட்டார்.

மத்திய அரசு எப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக பொறுப்புள்ள அரசியல் கட்சிகளும் அறிவியல் அமைப்புகளும் ஆலோசனைகளையும் கோரிக்கை களையும் முன்வைத்து வருகின்றன. அவற்றைப் பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதே பிரதமரின் தலையாயக் கடமை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.