tamilnadu

img

கொரோனா கொடுமை... மகள்-தந்தை 1,500 கி.மீ. சைக்கிள் பயணம்

புதுதில்லி, மே 19- கொரோனா பரவல் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. குறிப்பாக புலம் பெயர்ந் தோர் வாழ்நிலை தான் மோசமாக உள்ளது. இந்த நிலையில் காயமடைந்த தனது தந்தையை தில்லியிலிருந்து பீஹார் மாநி லம் தர்பங்காவுக்கு கிட்டத்தட்ட 1,200 கிலோ மீட்டர் தூரம் 15-வயது மகள் ஜோதி அழைத்துச் சென்றுள்ளார். இது குறித்து ஜோதி கூறுகையில், “இர வில் சைக்கிள் ஓட்டும் போது கூட நான் பயப்படவில்லை, நூற்றுக்கணக்கான புலம் பெயர்ந்தோர் நெடுஞ்சாலைகளில் நடந்து சென்றதைப் பார்த்தோம். எங்கள் ஒரே கவலை சாலை விபத்து குறித்தே இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக நாங்கள் விப த்தை எதிர்கொள்ளவில்லை என்றார். மேலும் அவர் கூறுகையில், “எனது தந்தை தில்லியில் ஒரு இ-ரிக்‌ஷா ஓட்டு வார். ஊரடங்கால் அவர் வேலையிழந்தார். இதனால் ரிக்‌ஷாவை அதன் உரிமையாளரி டம் ஒப்படைக்க வேண்டியிருந்தது. ஆனால் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. மே 10- ஆம் தேதி ரூ.500 செலவழித்து சைக்கிள் ஒன்றை வாங்கி எனது தந்தை யை அழைத்துக்கொண்டு புறப்பட்டேன் மே 16-ஆம் தேதி தர்பங்கா வந்து சேர்ந்தேன்”.   “எங்களிடம் அதிக பணம் இல்லை, வீட்டின் உரிமையாளர் அறையை காலி செய்யும்படி நிர்ப்பந்தம் கொடுத்தார். எங்க ளுக்கு உதவ யாரும் இல்லை, எனவே நாங்கள் எங்கள் கிராமத்திற்குத் திரும்ப முடிவு செய்தோம். நாங்கள் ஒரு வேன் டிரை வரிடம் பேசினோம், அவர் தில்லியில் இருந்து தர்பங்காவுக்கு 6,000 ரூபாய் கேட்டார். வேறுவழியின்றி ரூ.500-க்கு சைக் கிள் வாங்கி அவரை அமரவைத்து ஓட்டி வந்தேன் என்றார்.