புதுதில்லி:
மத்திய அரசில் பத்துக்கும் மேற்பட்ட முக்கிய உயரதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். புதிய உள்துறைச் செயலாளராக அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார். அஸ்ஸாம் மேகாலயா கேடர் அதிகாரியான இவரை உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்வு செய்துள்ளார்.மத்திய எரிசக்தித் துறை செயலாளராக இருந்த 1984 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அஜய்குமார் பல்லா, புதிய உள்துறைச் செயலாளராக பதவியேற்கிறார். இப்போதைய உள்துறைச் செயலாளர் ராஜியே கௌபாவுக்கு பதிலாக அவர் இந்த புதிய பொறுப்பை ஏற்கிறார். ஆகஸ்டு 2021 வரை இவர் இப்பதவியில் இருப்பார்.
பொருளாதார விவகாரத்துறை செயலாளராக இருந்த சுபாஷ் சந்திர கர்க் எரிசக்தித் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். குஜராத் கேடர் அதிகாரியான அட்டனு சக்கரவர்த்தி புதிய பொருளாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய தொலைத் தொடர்புத்துறை செயலாளராக அன்ஷு பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இப்போதைய தொலைத்தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தர்ராஜனுக்கு பதிலாக அவர் இப்பொறுப்புக்கு வருகிறார். கூடுதல் செயலாளர்களாக இருந்த 12 அதிகாரிகளுக்கும் மேற்பட்ட வர்கள் செயலாளர் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.