tamilnadu

img

பஞ்சாப்பிலும் சிபிஐக்கு அனுமதி இல்லை.... அம்ரீந்தர் சிங் அரசு நடவடிக்கை

சண்டிகர்:
மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு வழக்கப் பட்டிருந்த பொது அனுமதியை, ராஜஸ்தான், சத்தீஸ்கர்,ஜார்க்கண்ட், மேற்குவங்கம், மகாராஷ்டிரா மற்றும் கேரளாஆகிய மாநிலங்கள் அண்மையில் ரத்து செய்தன.இதன் மூலம், இந்த 6 மாநிலங்களுக்குள், மாநில அரசின் முன் அனுமதி இல்லாமல்சிபிஐ அமைப்பு விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

மத்திய பாஜக அரசானது,எதிர்க்கட்சிகளை பழிவாங்கவும், பயமுறுத்தவும் சிபிஐ அமைப்பை துஷ்பிரயோகம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த பின்னணியில் இந்த தடையை மாநிலங்கள் விதித்திருந்தன.இந்நிலையில், அம்ரீந்தர் சிங் தலைமையிலான பஞ் சாப் மாநில காங்கிரஸ் அரசும் சிபிஐ அமைப்புக்கு வழங்கப்பட்டிருந்த பொது அனுமதியை திரும்பப் பெற்றுள்ளது.தில்லியைத் தவிர, ஏனைய மாநிலங்களில் சிபிஐ தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டுமானால், சம்பந்தப் பட்ட மாநில அரசு ‘பொதுஒப்புதல்’ பெற வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.