tamilnadu

img

மகாராஷ்டிராவில் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்தது பாஜக

மும்பை, நவ.24- பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் முதல மைச்சராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வ ராகவும் சனிக்கிழமை காலை 7.30 மணி யளவில் பதவியேற்றனர். தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் சிவசேனை ஆட்சி யமைக்க முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்துள்ளது. சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைச்சரவை அமைப்பதற்கான முயற்சி கள் நடந்து கொண்டிருந்தன. இந்த முயற்சி கள் நிறைவு பெறும் கட்டத்தை எட்டிய நிலை யில், மத்திய பாஜக அரசு மாநிலத்தின் ஆளு நர் மூலம் ரகசியமாகவே பாஜக சட்டமன்ற கட்சித் தலைவரான பட்னவிஸை அழைத்து சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் முதல்வராக பதவியேற்க செய்துள்ளது- துணை முதல்வராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவாரையும் பதவியேற்க வைத்து அக்கட்சியின் எம்எல்ஏக்களை வளைத்து பிடிக்க திட்டமிட்டுள்ளது. 

இதற்கிடையில் காலை 5.30 மணிக்கு குடி யரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப் பட்டதாக பின்பு கூறப்பட்டள்ளது. இவை யாவும் இதுவரை இல்லாத நடைமுறை களாகவே மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்திருந்தன என்பது கடும் விமர்ச னத்திற்கு உள்ளானது. இதற்கு சிவசேனை, காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் பல வும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் மீதும் அவருக்கு ஆதரவளிக்கும் சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதும் ஒழுங்கு நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் சரத் பவார் தெரிவித்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் எப்படியும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு தோல்வியடையும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து சட்ட ரீதியாகவும் அரசி யல் ரீதியாகவும் போராடுவோம் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனிடையே தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை மகாராஷ்டிரா மாநி லத்துக்கு வெளியே அழைத்துச் செல்ல காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தக வல்கள் தெரிவிக்கின்றன. குதிரை பேரத்தைத் தடுக்கும் நோக்கில் காங்கிரஸ் ஆளும் மாநிலம் ஒன்றுக்கு அழைத்துச் செல்ல இந்த முடிவு எடுக்கப்பட்டி ருப்பதாகத் தெரிகிறது.

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 288 தொகுதி களில் பா.ஜ.க 105 இடங்களிலும், சிவசேனை 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதி களிலும் வென்று இருந்தது. சிவசேனை தலைமையிலான ஆட்சி அமையும் என்று பேசப்பட்டுவந்த சூழலில் யாரும் எதிர்பாராத வண்ணம் மீண்டும் தேவந்திர பட்னவிஸ் முதல்வராக சனிக் கிழமை காலை பதவியேற்றுள்ளார். “மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க அஜித் பவார் ஆதரவு அளித்தி ருப்பது அவரது தனிப்பட்ட முடிவே தவிர தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிலைப் பாடு அல்ல. அவருடைய இந்த முடிவை நாங்கள் ஆதரிக்கவில்லை” என்று தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். சிவசேனை கட்சியை சேர்ந்த சஞ்சய் ரவுத், அஜித் பவாரின் முடிவுக்கும், சரத் பவா ருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.

“அஜித் பவாரும், பாஜகவிற்கு ஆதர வளித்த சட்டமன்ற உறுப்பினர்களும் மகா ராஷ்டிர மக்களை ஏமாற்றிவிட்டனர். எனினும், திட்டமிட்டபடி, சரத் பவாரும், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்ரேவும் இன்று சந்தித்து பேச உள்ளனர்” என்று அவர் கூறி யுள்ளார். தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவ சேனை தலைவர்கள் செய்தியாளர்களை கூட் டாக சந்தித்தனர். “பாஜக எப்போதுமே குதிரை பேரத்தில் ஈடுபட்டு ஆட்சியை அமைக்கும் போக்கைப் பின்பற்றி வருகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உண்மையான தொண்டர்கள், பாஜகவுடன் ஒருபோதும் கைகோர்க்க மாட்டார்கள்,” என்று சரத்பவார் கூறினார். சுமார் 10 முதல் 11 சட்டமன்ற உறுப்பி னர்கள் அஜித் பவாரின் பக்கம் உள்ளனர் என்றும் சரத் பவார் தெரிவித்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் அடுத்த முதல மைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்ப தற்கு கட்சிகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டுள்ள தாக செய்திகள் வெள்ளியன்று வெளியாகின. எனவே, மகாராஷ்டிராவின் அடுத்த முதல மைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்பார் என பரவலாக பேசப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அன்குஷ் காகாடே, “இது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கள் சரத் பவாரின் வார்த்தைக்காக காத்தி ருக்கிறோம்” என்று தெரிவித்தார்.தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து எத்தனை சட்ட மன்ற உறுப்பினர்கள் ஆதரிக்கிறார்கள் என்ப தும் தெளிவாக தெரியவில்லை.அதுபோல சிவசேனையும் இதுவரை எந்த கருத்தும் வெளியிடவில்லை.

நிலையான ஆட்சி அமையவே பா.ஜ.க வுடன் கூட்டணி சேர்ந்ததாக அஜித் பவார் தெரிவித்துள்ளார். இதனிடையே மகாராஷ்டிராவின் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “மகாராஷ்டிராவின் முதல்வராக பதவி யேற்றுள்ள தேவேந்திர பட்னவிஸ் மற்றும் துணை முதல்வராக பதவியேற்றுள்ள அஜித் பவாருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மகாராஷ்டிராவின் பிரகாச மான எதிர்காலத்திற்காக அவர்கள் விடா முயற்சியுடன் செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று பிரதமர் மோதி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் பட்னவிஸ் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு நவம்பர் 30 வரை மாநில ஆளு நர் பகத்சிங் கோஷியாரி கால அவகாசம் வழங்கியுள்ளார். பட்னவிஸ் முதல்வர் பதவியேற்றதை எதிர்த்து சிவசேனை சார்பில் உச்சநீதிமன்றத் தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக கேவலமான மோசடிகள்

சிபிஎம் விமர்சனம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அதி காரத்தை கைப்பற்றுவதற்காக கேவல மான மோசடிகள் நடைபெற்றிருக்கின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கூறியிருக்கி றது. இதுதொடர்பாக கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: பாஜகவின் அரசியல் ஒழுங்கீனம் என்பது அதன் உச்சக்கட்டத்தை அடைந் துள்ளது. ரகசியமான முறையில் மகா ராஷ்டிர மாநில முதல்வரும், துணை முதல் வரும் பதவியேற்ற விதம் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பாஜக எந்த அளவு தரம்தாழ்ந்து போகும் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்பதை வெளிப்படுத்து கிறது. முன்பு கோவா, கர்நாடகா, வடகிழக்கு மாநிலங்களில் அவர்கள் செய்த வழி களிலேயே இதையும் செய்திருக்கிறார் கள். அரசியல் சட்ட அதிகாரம் பெற்ற குடி யரசுத் தலைவரின் பதவி மற்றும் ஆளு நரின் பதவியையும் அவர்களது அரசி யல் நோக்கத்தை அடைவதற்காக தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்து வரும் நிலைமைகளை உன் னிப்பாக கவனிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.