tamilnadu

img

48 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

ஷார்ஜா, மே 6- ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் ஷார்ஜாவில் 48 மாடி அப்கோ கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தக் கட்டடம் 198 மீட்டர் உயரம் கொண்டது. செவ்வாயன்று இரவு ரமலான் நோன்பு நிகழ்ச்சி நிறைவடைந்த பின் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஏழு பேர் மட்டும் காயமடைந்ததாக ஷார்ஜா ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. விபத்து நிகழ்ந்தவுடன் கட்டடத்தில் இருந்தவர்கள் கொரோனாவிலி ருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கான முகக்கவ சங்கள் கூட இன்றி அவசர அவசரமாக வெளியேறினர். இந்த விபத்தில் கட்டடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாக னங்கள் சேதமடைந்தன. கட்டடத்தில் இருந்தவர்கள் பாது காப்பாக வெளியேற்றப்பட்டதாகக் கூறப்பட்டாலும் யாரா வது கட்டடத்தில் சிக்கியிருக்கிறார்களா என்று சோதனை செய்ய காவல்துறையினர் டிரோனைப் பயன்படுத்தினர்.