tamilnadu

img

ஜேஇஇ மெயின் தேர்வு தெலுங்கானா முதலிடம்

புதுதில்லி:
ஜேஇஇ மெயின் தேர்வுமுடிவுகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் வெளியாகின. இதில் 1 மாணவி 24 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் 8 பேர்நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். தில்லியில் 5 பேர், ராஜஸ்தானில் 4 பேர்,ஆந்திராவில் மூவர், ஹரியாணாவில் 2 பேர், குஜராத் மற்றும்மகாராஷ்டிராவில் தலா ஒரு மாணவர் 100 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.தேர்வர்கள் jeemain.nta.nic.in என்ற இணைய முகவரியை கிளிக் செய்து தங்களின் விண்ணப்ப எண், கடவுச்சொல் மூலம் தங்களின் தேர்வு முடிவுகளை அறிய முடியும்.ஜேஇஇ மெயின் தாள் 1 மற்றும்தாள் 2-ல் முதல் 2.45 லட்சம் இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை எழுதத் தகுதி பெற்றவர்கள் ஆவர்,இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடிக்களில் மாணவர்கள் படிக்க முடியும். ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வு செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற உள்ளது.

;