tamilnadu

img

தெலுங்கானா உள்துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு... 

ஹைதராபாத்
ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது. அம்மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் எடுக்கப்பட்டதாக கூறினாலும் இன்னும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. இதுவரை அங்கு 14 ஆயிரத்து 419 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 247 பேர் பலியாகியுள்ளனர். 9,000 பேர் குணமடைந்துள்ள நிலையில், 5,172 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   

இந்நிலையில், அம்மாநில உள்துறை அமைச்சர் முகமது அலிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஜூப்பிலி ஹில்ஸ் என்ற தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் முகமது அலியின் பாதுகாப்பு போலீசார், அவரது உதவியாளர்கள் ஆகியோரைத் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

;