tamilnadu

img

தமிழக மீனவர்கள், படகுகள் விடுவிக்கப்படும்

இந்தியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதி அறிவிப்பு

புதுதில்லி,நவ.29- இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள், படகுகள் விடுவிக்கப்படும் என்று இந்தியா வந்துள்ள இலங்கை ஜனாதிபதி  கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.  3 நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே இந்தியா வந்துள்ளார்.  வெள்ளியன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு  அளிக்கப்பட்டது.  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் கோத்தபய ராஜபக்சேவை வரவேற்று அதிகாரிகளை அறிமுகப்படுத்தினர். 

இதன்பின்னர் கோத்தபய ராஜபக்சே பேசுகையில்,  இந்தியா மற்றும் இலங்கை இடையேயான உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். பாதுகாப்பு மற்றும் பொருளாதார பிரச்சனையில் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றார்.  பின்னர்  செய்தியாளர்கள் சந்திப்பில், இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என்று தெரிவித்தார்.