tamilnadu

img

வலைதளத்தில் திடீர் பிரச்சனை...  மாணவர்களை பதற வைத்த சிபிஎஸ்இ வாரியம்... 

சென்னை 
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ ) 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியாகியது. தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த சில நிமிடங்களில் சிபிஎஸ்இ வலைதளம் முடங்கியது. சர்வர் பிரச்சனை சரியாக நீண்ட நேரம் ஆனது. இதனால் மாணவர்கள் பதற்றத்துக்கு உள்ளாகினர்.  இதனால் சிபிஎஸ்இ வாரியம் பள்ளிகளுக்கு இமெயில் மூலம் முடிவுகளை அனுப்பியது. கூடுதல் வசதியாக தமிழக அரசைப் போல் மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அனுப்பியது. 

;