tamilnadu

img

கார்டோசாட்-3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

ஸ்ரீஹரிகோட்டா:
இந்தியாவின் புவி மற்றும் பாதுகாப்புகண்காணிப்புக்கு உதவும் கார்டோசாட்-3 செயற்கைக்கோள் உட்பட 14 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி47 ராக்கெட் புதன்கிழமையன்று காலை 9.28 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் திட்டமிட்டபடி, புவிசுற்றுவட்டப் பாதையில் கார்டோசாட்-3 வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்தியாவின் புவி மற்றும் பாதுகாப்பு கண்காணிப்புக்கு உதவும் கார்டோசாட்-3 உட்பட 14 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட்  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.இதனை இஸ்ரோ விஞ்ஞானிகள், 3டி முறையிலான கிராபிக்ஸ் மற்றும் படக்காட்சிகளுடன் விவரித்தனர்.

இதுவரை 8 கார்டோசாட் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன.தற்போது 9-வது செயற்கைக்கோளாக கார்டோசாட் - 3 எனும் தொலை உணர்வு செயற்கைக்கோளை இஸ்ரோ நிறுவனம் வடிவமைத்து, செலுத்தியுள்ளது.ஆயிரத்து 625 கிலோ எடையிலான கார்டோசாட்-3 செயற்கைக்கோள், தரையிலிருந்து, 509 கிலோ மீட்டர் தொலைவில் புவிசுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானவுடன், இஸ்ரோ தலைவர்
சிவன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் உற்சாகமடைந்தனர்.5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் இந்த கார்டோசாட்-3 செயற்கைக்கோள் வானில்மேகக் கூட்டங்களை ஊடுருவி துல்லியமாக புகைப்படங்களை எடுத்து அனுப்பும் திறன் கொண்டது. மேலும் இரவு நேரங்களிலும் தெளிவான புகைப்படங்களை எடுக்கும். இது, நிலவளம், கடற்பகுதிகள் உள்ளிட்ட புவி ஆராய்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

;