சென்னை, ஜூன் 26- சென்னையைச் சேர்ந்த இசை அமைப் பாளர் கணேஷ் பி. குமார் உருவாக்கியுள்ள “ஸ்பிரிட் ஆஃப் ஹியுமானிடி’’ சிம்பொனி இசை ஆல்பத்தில் புறநாற்றுத் தமிழ்பாடல் இடம்பெற்றுள்ளது. “கடந்த கால வரலாற்றில் இந்தியா, அமைதியை நாடி வந்த அனைவருக்கும் ஐரோப்பா போன்ற தொலைதூர கண்டங் களிலிருந்தோ அல்லது மிக நெருங்கிய அண்டை நாடுகளிலிருந்தோ - துன்பு றுத்தப்பட்டு புகலிடம் தேடி வந்தோருக்கு அடைக்கலம் தந்துள்ளது, நமது நாடு. கணேஷ் வெளியிட்டுள்ள இந்த சிம்பொனி இசை ஆல்பத்திலுள்ள, தி ஜர்னி என்னும் சிம்பொனிக் போயத்தில், போலந்து நாட்டிலிருந்து அடைக்கலம் தேடி வந்தோருக்கு இந்தியக் கலாச்சார விழுமி யங்களின் அடிப்படையில் அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள் ளது. தமிழ் இலக்கியமான புறநானூற்றி லிருந்து ஒரு பாடலும் இதில் இடம்பெற்றுள் ளது. இந்நிலையில் மத்திய அரசு சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இசைய மைப்பாளர் கணேஷ்குமாருக்கு இந்த இசை ஆல்பத்தை உருவாக்கியதற்காக பாராட்டு தெரிவித்துள்ளார்.