tamilnadu

img

இந்திய – சீன எல்லைப்பகுதி அமைதிக்கு உயர்மட்ட பேச்சுவார்த்தை தொடங்குக!

அனைத்துக்கட்சி கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி வேண்டுகோள்

புதுதில்லி, ஜூன் 20- இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்ட உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தையை நடத்தவேண்டும் என்று சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தினார். இந்திய – சீன எல்லைத் தகராறு தொடர்பாக பிர தமர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுச் செயலாளர் சீத்தாராம்யெச்சூரி கலந்து கொண்டார். அப்போது அவர் கட்சியின் சார்பில் அரசாங்கத்திற்கு முன்வைத்த பரிந்து ரைகள் வருமாறு:

1.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய-சீன எல்லைக்கோட்டுப்பகுதி யில், லடாக்கில் கல்வான் பள்ளத்தாக் கில், சமீபத்தில் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த நம் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல் களைத் தெரிவித்துக் கொள்கிறது.

2. நம்முடைய அயல் துறை அமைச்ச ருக்கும், சீன அயல்துறை அமைச்சரு ககும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தொடர்பாக, நம் அர சாங்கத்தின் சார்பில் வெளியிடப்பட் டுள்ள அறிக்கையில், “சீனாவுடனான பேச்சுவார்த்தையின் முடிவில் ஒட்டு மொத்த நிலைமைகள் பொறுப்புணர்வு டன் கையாளப்படும்” என்றும், “இரு தரப்பினரும் ஜூன் 6 அன்று ஒப்புக் கொண்டபடி பரஸ்பரம் பின்வாங்கும் நடவடிக்கை உண்மையுடன் அமல் படுத்த ஒப்புக் கொள்ளப்படுகிறது” என் றும் கூறப்பட்டுள்ளது. அந்தவகையில், பிரச்சனைகளைப் பெரிதாக்கிட, எந்தத்தரப்பும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. அதற்குப் பதிலாக இருதரப்பினரும் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளின்படி அமைதி திரும்புவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.

3. மத்திய அரசாங்கம் இந்த நிலைப் பாட்டை ஏற்றுக்கொண்டிருப்பதால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த அணுகுமுறைக்கு தன் ஆதரவைத் தெரி வித்துக் கொள்கிறது.

4. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசாங்கம், எல்லைப் பாதுகாப்புக் கோடு குறித்த தெளிவான வரையறை யை உருவாக்கிடவும், எல்லையில் அமைதியை நிலைநாட்டிடவும், உயர் மட்ட அளவிலான பேச்சுவார்த்தை களைத் தொடங்கிட வேண்டும். இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பரிந்துரைகள் அளிக் கப்பட்டுள்ளன.

            (ந.நி.)