நாகர்கோவில், ஜூன் 22- இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற் றது. இதில் முக்கிய குற்றவாளியாக வும் மனித வெடிகுண்டாகவும் செயல் பட்ட ஜஹ்ரான் ஹாஷிம் என்பவரு டன் பேஸ்புக் நண்பராக இருந்து வந்த தையடுத்து அசாருதீன் என்பவரை என்ஐஏ கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் அடிப்படை யில் வெள்ளியன்று குமரி வந்த என்ஐஏ அதிகாரிகள் பூங்குளத்தான்விளை பகுதியைச் சேர்ந்த இம்ரான்கான் (32) என்பவரிடம் விசாரணை நடத்தி னர். பின்னர் அவரை தொடர் விசா ரணைக்காக வெள்ளியன்று மாலை கொச்சிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரிடம் சனியன்று 2 ஆவது நாளாக விசாரணை நடத்தினர். இம்ரான்கான் கோவையில் சிக்கிய அசாருதீனிடம் பேஸ்புக் தொடர்பில் இருந்ததோடு செல்போனிலும் இவர் களுக்கு இடையே உரையாடல்கள் நடந்ததாக என்ஐஏ அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். இதை தொடர்ந்து தான் இம்ரான் கானை என்ஐஏ அதிகாரிகள் விசார ணைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. தற்போது இம்ரான்கா னின் செல்போன் பேஸ்புக் கணக்கு கள் முடக்கப்பட்டுள்ளன. விசாரணை வளையத்தில் சிக்கிய இம்ரான்கா னுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. இவரது வீட்டி லும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது.