tamilnadu

img

மன்மோகன் சிங்கிற்கு இருந்துவந்த எஸ்பிஜி பாதுகாப்பு பறிப்பு!

புதுதில்லி:
1984-இல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து, பிரதமர்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், 1985-இல் ஏற்படுத்தப்பட்டதுதான் எஸ்பிஜி(Special Protection Group) எனப் படும் சிறப்பு பாதுகாப்பு படையாகும்.
இந்த பாதுகாப்பைப் பெற்ற முதல் பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தார். இதற்கான சிறப்புச் சட்டம் 1988-இல்நிறைவேற்றப்பட்டது. ஆனால், பிரதமர்களுக்கு மட்டுமேயான இந்த பாதுகாப்பு, 1989-இல் ராஜீவ் காந்தி பதவியை இழந்ததும் விலக்கிக் கொள்ளப் பட்டது.இந்நிலையில், 1991-இல் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதால், சிறப்புப் பாதுகாப்புப் படைச் சட் டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, பிரதமர்களுக்கு மட்டுமல்லாமல், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி,ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மன் மோகன் சிங் ஆகிய நால்வருக்கும் எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.இந்நிலையில்தான், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டு, ‘இசட் பிளஸ்’ என்றஅளவில் அவரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.மன்மோகன் சிங்கிற்கு தற்போது அச்சுறுத்தல் இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.சில மாதங்களுக்கு முன்பு, மன்மோகன் சிங்கிற்கு நியமிக்கப்பட்டிருந்த உதவியாளர்கள் எண்ணிக்கையும் 14 பேர் என்பதிலிருந்து, வெறும்5 பேராக குறைக்கப்பட்டது. எண் ணிக்கையை குறைக்க வேண்டாம் என்று மன்மோகன் சிங் கடிதம் எழுதிக்கேட்டும் மோடி அரசு அதனை ஏற்கவில்லை. ஆனால், வாஜ்பாய் கடந்தாண்டு இறக்கும் வரையிலும், 14 உதவியாளர்களைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.