tamilnadu

img

சீத்தாராம் யெச்சூரி மற்றும் ராஜா ஆகியோர் காஷ்மீர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

ஸ்ரீநகர், 
காஷ்மீர் நிலவரம் குறித்து நேரில் சென்று கண்டறிய சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் டி.ராஜா ஆகியோர் அங்கு சென்றனர். 
மத்திய மோடி அரசு ஆகஸ்ட் 5 ம் தேதி காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, மற்றும் 35ஏ சட்டபிரிவை ரத்து செய்தது. இதையடுத்து காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றி அறிவித்தது. 
இந்நிலையில் தற்போது வரை காஷ்மீரில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் யூசுப் தாரிகாமியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களின் நிலை குறித்தும் காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய நிலவரம் குறித்து நேரில் சென்று பார்வையிடும் பொருட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோர் காஷ்மீருக்கு சென்றனர். ஆனால் இருவரும் காஷ்மீர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 
-ஸ்ரீநகர் விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள அவர்கள் இருவரும் வேறு எங்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இருவரையும் திரும்பி அனுப்பும் முயற்சிகள் நடந்து வருகிறது, எனினும் அவர்கள் திரும்பி செல்ல மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இருவரும் விமானத்தில் புறப்படுவதற்கு முன்பாக ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் அவர்களது சக நிர்வாகியான முகமது யூசப் தாரிகாமியை சந்திக்க அனுமதி பெற்றே ஸ்ரீநகர் புறப்பட்டனர். எனினும், அவர்கள் இருவரும் விமான நிலையத்திலே தடுத்து நிறுத்தப்பட்டனர். 
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த சீதாரம் யெச்சூரி கூறும்போது, "ஸ்ரீநகருக்குள் நுழைய அனுமதிக்காத ஒரு சட்ட உத்தரவை அவர்கள் எங்களுக்குக் காட்டினர். பாதுகாப்பு காரணங்களால், நகரத்திற்கு நுழைவதற்கு அனுமதி இல்லை என்று அதில் கூறப்பட்டிருந்தது. எனினும், நாங்கள் தொடர்ந்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கிறோம் என்று தெரிவித்தார்.  
முன்னதாக, காஷ்மீர் நிலவரம் குறித்து விவாதிக்க, டெல்லியில் இருந்து, காஷ்மீர் சென்ற காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் அவர், டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.