tamilnadu

img

ஜாமியா மிலியாவில் சீத்தாராம் யெச்சூரி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தியும், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட இச்சட்டத்தை எதிர்த்து போராடும் மக்கள் மீது மத்திய அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறையைக் கண்டித்தும் நாடு முழுவதும் மாணவர்கள் பெரும் கிளர்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். தில்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்து வரும் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. ஞாயிறன்று ஜாமியா மிலியா மாணவர்களிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார்.