tamilnadu

img

விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர வேண்டுமா?

புதுதில்லி:
விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை சமீபத்தில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த தடைதொடர வேண்டுமா என தீர்மானிப்பதற்காக நீதிபதி தலைமையில் மத்திய அரசு ஒரு தீர்ப்பாயத்தை அமைத்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது. இந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் இந்த தடை மீண்டும் ஒரு முறை நீட்டிக்கப்பட்டது.இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடையை தொடர போதுமான காரணங்கள் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி தீர்மானிக்க ஒரு தீர்ப்பாயத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்துள்ளது.

இதற்காக தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா ஷேகல் தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.