tamilnadu

img

மத்திய அமைச்சர் சொல்கிறார் வேலை இழப்புக்கு ஆதாரமெல்லாம் இல்லை

புதுதில்லி, டிச.10- வேலைவாய்ப்பு குறைந்து விட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் மக்களவையில் தெரிவித் துள்ளார்.  பண மதிப்பு நீக்கத்தால், தனது தொகுதியில் ஆயி ரக்கணக்கான தொழிலாளர் கள் வேலை இழந்து விட்ட தாகவும் இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக் குமா? என்றும் மேற்குவங்கத் தைச் சேர்ந்த கல்யாண் பானர்ஜி என்ற எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குத்தான், “பண மதிப்பு நீக்கத்தால்தான் வேலை இழப்பு அதிகரித்துள் ளது என்பதைக் காட்ட எந்த வொரு ஆதாரமும் இல்லை” என்று மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.  வேலை வாய்ப்பை அதி கரிக்க, மத்திய அரசு பல் வேறு திட்டங்களை செயல் படுத்தி வருவதாகவும் அமை ச்சர் கூறிக்கொண்டுள்ளார்.