மும்பை, ஜூலை 27- மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் புறநகரில் வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்கிறது. நாள் முழுவதும் பெய்த மழையால் மும்பை நகரின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. கனமழையால் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் தண்டவாளங்களிலும் தண்ணீர் சூழ்ந்ததால், பட்லாப்பூர் ரயில் நிலைய மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் 2 ஆயிரம் பயணிகளை ஏற்றி சென்ற மும்பை-கோலாப்பூர் மகாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ் ரயில் மும்பையிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள வான்கனி மற்றும் பட்லாப்பூர் இடையே வெள்ளத்தில் நிறுத்தப்பட்டது. இந்த ரயிலில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 700 பயணிகள் சிக்கிக் கொண்டனர். ரயில் சிக்கியுள்ள பகுதிக்கு, தேசிய பேரிடர் மீட்புப்படை, ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் நகர போலீசார் விரைந்துசென்று மீட்பு பணியில்ஈடுபட்டனர். இதில் ரயிலில் இருந்த 700 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்ட னர் என மத்திய ரயில்வே தலைமை தகவல் தொடர்பு அதிகாரி தெரிவித்தார். மகாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுவர் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே மும்பையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழை காரணமாக மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த மாத இறுதியில் பருவமழை தீவிரம் அடைந்தது. இதில் தொடர்ந்து 5 நாட்கள் மழை கொட்டி தீர்த்தது. அப்போது, மலாட் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 31 பேர் பலியானா ர்கள். அதன்பின்னர் இயல்பு நிலை திரும்பியிருந்தது. மும்பை புறநகரில் வெள்ளியன்று மீண்டும் கனமழை பெய்தது. நாள் முழுவதும் பெய்த மழையால் மும்பை நகரின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. கனமழையால் ரெயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிப்படை ந்தது. வெளுத்து வாங்கிய மழையால் ரெயில் தண்டவாளங்களிலும் தண்ணீர் சூழ்ந்தது. பட்லாப்பூர் ரெயில் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் அந்த மார்க்கத்தில் ரெயில்கள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் கனமழை காரணமாக கோபோலி பகுதி யில் உள்ள பாலி சாலை முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் தொடர் மழையின் காரணமாக மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.