tamilnadu

img

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ரூபா குருநாத் பொறுப்பேற்பு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவரும், இந்தியா சிமெண்ட்ஸின் உரிமையாளருமான ஸ்ரீனிவாசனின் மகள் ரூபா குருநாத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கான தேர்தல் செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி  அன்று நடைபெறவிருந்த நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் ரூபா குருநாத் போட்டியின்றி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் துணைத் தலைவர்கள், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட இதர பதவி உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.  இந்நிலையில், சென்னை சேப்பாக்கத் தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலு வலகத்தில் வியாழனன்று ரூபா குருநாத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.  தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை ரூபா குருநாத் பெற்றார்.