tamilnadu

img

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக அசாமில் எழுச்சி!

தொடர் போராட்டம் நடத்தப் போவதாகவும் எச்சரிக்கை

கவுகாத்தி, நவ.23- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரி வித்து, அசாம் மாநிலத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தி யுள்ளனர். பாகிஸ்தான், ஆப்கா னிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து வந்தவர் களில் இஸ்லாமியர் நீங்க லாக அனைவருக்கும் குடி யுரிமை வழங்கப்படும் என்று மத்திய பாஜக அரசு அண் மையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது.  இதற்கு பல்வேறு கட்சி யினரும், அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரி வித்து வரும் நிலையில், மோடி அரசோ இந்த சட் டத்தை அமல்படுத்துவதில் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், குடி யுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, அசாம் தலைநகரான கவு காத்தியில் பல்வேறு அமை ப்புக்கள் இணைந்து போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  கிரிஷக் முக்தி சங்கிராம் சமிதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பங்கேற்ற இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அர சைக் கண்டித்து முழக்கங் களை எழுப்பியதுடன், சட் டத்திருத்தத்தை திரும்பப் பெறும் வரை தொடர் போரா ட்டத்தில் ஈடுபடப் போவதாக வும் அறிவித்துள்ளனர்.