இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்
புதுதில்லி, ஆக.20- மத்திய அரசு முடிவுக்குவந்தால் கொரோ னா தடுப்பு மருந்துகளுக்கு அவசர ஒப்புதல் அளிக்க தயாராக இருக்கிறோம் என்று ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் பல்ராம் பார்க்கவா நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்துள்ளார். கொரோனாவைக் கட்டுப்படுத்த உல கின் பல்வேறு நாடுகளும் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
ரஷ்யா தடுப்பூசியை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டது. சீனாவும் தடுப்பூசி பயன்பாட்டுக்குத் தயார் என்று கூறி அதற்கு விலையும் அறிவித்துவிட்டது. இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பாரத் பயோடெக், கேடிலா, செரம் ஆகிய நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளன. இந்த மருந்துகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையிலான சோதனையில் இருந்துவருகின்றன. இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா நேற்று ஆஜ ராகி கொரோனா தடுப்பு மருந்து நிலை குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர், கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உள்நாட்டு நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து, 2-வது கட்ட சோதனை முடியும் நிலையில் இருக்கிறது. மத்திய அரசு முடிவு செய்தால், அவசர அனுமதியளிப்பது குறித்து பரிசீலிக் கிறோம் என்று விளக்கமளித்தார்.