tamilnadu

img

கொரோனா நோயிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 93.05 சதவீதம்...

புதுதில்லி:
நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:புதிதாக 41,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 88 லட்சத்து 14ஆயிரத்து 579 பேராக உயர்ந்தது. புதிதாக 447 பேர்இறந்துள்ளனர்.  இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 29 ஆயிரத்து 635 பேராக உயர்ந்தது.  தொற்றில் இருந்து ஒரே நாளில் 42,156 பேர் குணமடைந்துள்ளனர்.  இதனால் குணமடைதோர் எண்ணிக்கை  82 லட்சத்து 05ஆயிரத்து 728 பேராக  உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட4 லட்சத்து 79 ஆயிரத்து 216பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.  குணமடைந்தோர் விகிதம் 93.05 சதவீதமாக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.47 சதவீதமாககுறைந்துள்ளது.  சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.48 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில்8 லட்சத்து 05 ஆயிரத்து 589கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 12 கோடியே 48 லட்சத்து 36 ஆயிரத்து 819 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.